முகப்பு

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ்

ஈழப்பரப்பில் இருந்து தமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பு முன்னர் எப்போதும் இல்லா அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பல புதிய இளைஞர்களும் கவிதை கதை என எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஈழ இலக்கிய விமர்சனமும் அடர்ந்து செறிவுற்றிருக்கிறது. ஈழப் படைப்புகளுக்கான சிறுபத்திரிகைகள் முதல் இணைய இதழ்கள் எனப் பல தளங்களில் எங்களது இலக்கியப் பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது. இது வரவேற்கக்கூடியதே.  மேலே ஈழப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டது நிலம் சார்ந்தல்ல. மாறாக பரம்பல் குறித்தானது. ஏனெனில் புலத்திற்கு வெளியே இருந்து புலம்பெயர் இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட […]

நூல்விமர்சனம்- தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்புநிற பைபிள்- உமையாழ் Read More »

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன்.

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை

எஞ்சியிருப்பதின் துயரம் – சுனில் கிருஷ்ணன். Read More »

சாருவின் முன்னுரை.

சாதனாவின் ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுத அமர்ந்த போது அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல என்று தோன்றியது. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் பற்றிய நாவல். ஆனால்

சாருவின் முன்னுரை. Read More »

ஓ,,,தாவீது ராஜாவே!

முதலில், அது மீன்தானா… என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரவு நேரத்தில் சுறாக்களும் அலைந்துகொண்டிருக்கும். முன்னொரு தடவையும்  இப்படித்தான் நிகழ்ந்தது. மீனென்று நினைத்து வலையை ஒரு திட்டமிடலின்றி இழுத்திருக்கின்றார். சுறா இவரைநோக்கி பாய்வதற்குச் சரியாக இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் வரவிருக்கும் ஆபத்துப்பற்றிச் சிந்தித்தார். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த சுறாவின் முகத்தை இரண்டு கைகளினாலும் தள்ளிவிட்டு குபீரென்று அப்பாற் பாய்ந்தார். அந்தச் சின்னப் படகின் பின்பக்கத்தில் விழுந்த சுறா, ஒரு விபரிக்க முடியாத மூர்க்கத் தனத்தோடு எம்பியெம்பிக்

ஓ,,,தாவீது ராஜாவே! Read More »

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான்.

விஸ்வரூபம் இரண்டு  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  ஆளவந்தான், குருதிப்புனல், விருமாண்டி போன்ற படு அட்டகாசமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களை இயக்கிய அதே கமல்ஹாசன்தானா இவரென ஆச்சர்யமாக இருந்தது.  ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.  படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல்

ஆம், கமல் நிகழ மறுத்த அற்புதம் தான். Read More »

பெருங் காமம்.

அதிகாலையில் விழிப்பு வந்து எழுந்து கொண்டார் திருவேங்கடம். தேகம் வியர்த்திருந்தது. அருகிலிருந்த பித்தளைச் செம்பை எடுத்து இரண்டு தடவைகள் குடித்தவர், செம்பை மறுபடியும் இருந்த இடத்திலேயே வைத்தார். தளர்ந்திருந்த சாரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டார். திருவேங்கடம் எப்பொழுதுமே இப்படித்தான். அதிகாலையில், தேகம் வியர்த்துப்போய், யாரோ தன்னை, தன் உடலை, அவசர கதியில் உலுப்பி எழுப்பியதுபோல் குபீரென்று எழுந்துகொள்வார். அதே வேகத்தோடு இடதுபக்கமும், வலதுபக்கமும் பார்த்து அமானுஷ்யமோ அல்லது மனிதரோ எதுவுமேயில்லையென்று உணர்ந்து அதன் பின்னரே தன்னினைவுக்கு வருவார்.  திருவேங்கடத்திற்கு

பெருங் காமம். Read More »

அர்த்தநாரீஸ்வரி.

1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER

அர்த்தநாரீஸ்வரி. Read More »

Scroll to Top