sathanasagadhevan

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்?

குரோசியாவாக வேடமிட்டிருந்த சோஃபியாவின் கண்களுக்குக் கீழாகச் சற்றுக் கறுத்திருந்தது. அதை மறைப்பதற்காக பவுடரை ஒற்றி ஒற்றி எடுத்தாள். கூர்ந்து கவனித்தபோது அப்போதும் கருமை தெரிவதாகவே அவளுக்குப் பட்டது. பாதங்களினால் தன்னைத்தானே எழுப்பி கண்ணாடிக்கு அருகாக முகத்தைக் கொடுத்தவள், விரல்களினால் கண்களுக்குக் கீழாக வருடினாள்.  அவளுக்கு அழுகை வந்தது. மேசையில் கைகளை ஊன்றிக் கொண்டு அழத்தொடங்கினாள். பின், சட்டென்று அழுகையை நிறுத்திக் கொண்டவள், நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். அவள் அழுத அழுகையின் கண்ணீரானது அவள் முகத்தில் போடப்பட்டிருந்த ஒப்பனையை […]

சோஃபியா அப்போதும் ஏன் அழுதாள்? Read More »

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.

“மூன்றாம் உலகப் போர் ஒருவேளை அணு ஆயுதங்களைக் கொண்டு போரிட்டால், நான்காம் உலகப் போரானது வில் அம்புகளைக்கொண்டு போரிட வேண்டும்.” —லார்ட் லூயி மவுண்ட்பேட்டன். ∙ “மூன்றாம் உலகப்போர் எதைக்கொண்டு போரிடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரானது வெறும் குச்சிகளும் கற்களும் கொண்டு தான் போரிடப்படும்.” —ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்ணாடி முழுவதுமாய், படர்ந்திருந்த பனிமூட்டத்தை, நான் கைகளினாற் தேய்த்து கண்களைக் கிட்டே கொண்டு போய்ப் பார்த்தேன். நெடு, நெடுவென்று வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும்,ஒலிவ் மரங்களும்

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள். Read More »

சிறுமி கத்தலோனா

வழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார் சிலோன் நாதன். அதில் நத்தையொன்று மெதுவாக – மிக மெதுவாக – ஊர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதனருகில் சென்று பார்த்தபோது, நல்லவேளை… கண்ணாடிக்கு வெளிப்பக்கமாகத்தான்  இருந்தது. தனது வலது கையின் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார். அது தன்னுடைய உணர்கொம்புகளிலாலான தலையைத் தூக்கி அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் மீண்டும் தன் பயணத்தைத் தொடரலாயிற்று.

சிறுமி கத்தலோனா Read More »

யூதாஸின் முத்தம்

‘யூதாஸின் முத்தம்’ என்ற இந்தக் கதையின் கதைசொல்லியான நான், முதலில் யூதாஸ் பற்றிய குறிப்புகளை திருவிவிலியத்திலிருந்தே எடுத்திருந்தேன். ஆனாலும் யூதாஸின் நற்செய்தி என்ற நூலிலிருந்தும் சில குறிப்புகளை எடுத்திருந்தேன். அதில், தான் பிலாத்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளில் யூதாஸ் காணியொன்றினை வாங்கியதாகவும், பின்னர் அந்த நிலத்திலேயே வயிறு வெடித்துச் செத்துப் போனதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நான் அதைத் தவிர்த்துவிட்டு திருவிவிலியத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதையை நகர்த்தலாமென்று முடிவு செய்கின்றேன். ஏனெனில் நான் இந்தக் கதையை எழுதுவதன் நோக்கம்

யூதாஸின் முத்தம் Read More »

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.

சில வருடங்களுக்கு முன்னர்,  நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்த மதம் குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன.  ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள்.  ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில்

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு. Read More »

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன்.

“ப. தெய்வீகன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு தமிழ் எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளரும் ஆவார். பெய்யென பெய்யும் வெயில் இவருடைய சமீபத்தைய நூலாகும்.” 1, எல்லோரையும் போலவே நானும் என்னுடைய முதலாவது கேள்வியை முதலில், உங்களைப் பற்றி  கொஞ்சம் சொல்லிவிடுங்களேன் என்றவாறாகவே முன் வைக்கின்றேன்? சொந்த இடம் மானிப்பாய். படிக்க சென்றது யாழ். இந்துக்கல்லூரி. அங்கிருந்து நேரே வேலைக்கு சென்ற இடம் உதயன் பத்திரிகை. போன மாத்திரத்திலேயே விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்று கண்டுகொண்டார்களோ என்னவோ விளையாட்டு செய்தியாளராக நியமனம் தந்தார்கள்.

விடுதலைப் புலிகள் மீது எனக்கும் பற்றிருந்தது. ப. தெய்வீகன். Read More »

Catalina

While contemplating suicide, as he was frequently wont to do, Ceylon Nathan happened to look closely at the plateglass window and noticed a snail crawling slowly across it. He went towards it and… luckily, it was on the other side of the glass pane. He tapped his right forefinger against the glass as though to

Catalina Read More »

The kiss of Judas

For the re-telling of this tale, “The Kiss of Judas”, I made my preliminary notes from the Holy Bible. But I also borrowed some facts from the Gospel of Judas. It is the latter text that mentions that Judas purchased a field with the wages of his sin and falling headlong, he burst open in the middle and all his

The kiss of Judas Read More »

Scroll to Top