ஈழப்பின்னணி கொண்ட வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் சாதனா மிக முக்கியமானவர். தற்போது ஜேர்மனியில் வாழும் சாதனா ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நூல் தொடர்பில் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.